Thursday, 28 November 2013

பொடுகை நீக்கும் சிறந்த ஹேர் மாஸ்க்குகள்!!!

பொடுகுத் தொல்லை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி பொடுகை நீக்க வேண்டும். இப்போது பொடுகை இயற்கை முறையில் போக்குவதற்கு எந்த ஹேர் மாஸ்க் சிறந்தது என்று ஒருசில பராமரிப்பு பொருட்களையும், அதற்கான முறையையும் பார்க்கலாம்.

எலுமிச்சை :  எலுமிச்சை ஒரு நல்ல பொடுகை நீக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றை விட்டு, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மைல்டு ஷாம்பு கொண்டு முடியை நீரில் அலச வேண்டும்.

கொத்தமல்லி :  கொத்தமல்லியை அரைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளித்தால், பொடுகு போய்விடும். அதிலும், இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்

ஆலிவ் ஆயில் :  தினமும் இரவில் படுக்கும் முன், ஸ்கால்ப்பில் ஆலிவ் ஆயிலை தடவி, ஊற வைத்து, காலையில் எழுந்து குளித்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

தயிர் : தயிரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, கலந்து ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலசிவிட்டால், தயிர் ஸ்கால்ப்பை சுத்தம் செய்து, எலுமிச்சை சாறு பொடுகு மற்றும் இறந்த செல்களை வெளியேற்றிவிடும். மேலும் இந்த முறை தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

வேப்பிலை : வேப்பிலையில் உள்ள கசப்பு தன்மையாலேயே, கிருமிகள் எங்கிருந்தாலும் அகன்றுவிடும். அந்த வகையில் பொடுகுத் தொல்லை இருந்தால், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையை அரைத்து, அதில் மிளகு தூள், வெந்தயப் பொடி மற்றும் சிறிது கற்பூரம் சேர்த்து கலந்து, சிறு துளி எலுமிச்சைசாறு சேர்த்து, எண்ணெயுடன் கூடிய தலை மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

செம்பருத்தி :  செம்பருத்தியின் இலை மற்றும் பூ, முடிக்கு மிகவும் நல்லது. அதிலும் இது முடியின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பொடுகை போக்கும் பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது.

அதற்கு நீரில் செம்பருத்தியின் இலை அல்லது பூவை போட்டு கொதிக்க விட்டு, நீரை வடிகட்டி விட்டு, இலை அல்லது பூவை நன்கு அரைத்து, அதில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பொடுகு நீங்குவதோடு, முடி நன்கு கருப்பாக வளரும்.

No comments:

Post a Comment